Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர்கள் அதிகம் இல்லாததால் கூட்டம் இல்லை

ஏப்ரல் 06, 2019 10:10

சென்னை: கடந்த காலத் தேர்தல் நேரத்தில்  பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை ஈடுபடுத்தி மக்களை கூட்டம் சேர்த்து வந்தனர். இதில் பெரும்பாலும் திமுக மற்றும்  அதிமுக கட்சிகள் நடிகர், நடிகைகளை ஈடுபடுத்தினர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் பிரச்சார நேரத்தில் நடிகர், நடிகைகளே பிரச்சார பீரங்கிகளாக இருந்தனர். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடும் என்பதால் இவர்களைப் பயன்படுத்தினர். வடிவேலு, சிங்கமுத்து, விந்தியா, கருணாஸ், பாக்கியராஜ், சிம்ரன், குஷ்பு, ராமராஜன், செந்தில், நமீதா மற்றும் கோவை சரளா, தியாகு, குண்டு கல்யாணம், விக்னேஷ் இன்னும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் இந்த தேர்தலில் பணம், மது, பிரியாணி என்று வாக்காளர்களின் எண்ணமும் கொஞ்சம் மாறி இருப்பதால் இதற்க்கு செலவு பண்ணவே கட்சிகள் அதிகளவு பணத்தை செலவு செய்கின்றனர். இது மட்டுமில்லாமல் பெரிய தலைவர்களின் பிரச்சாரங்கள் மற்றும் மாநாடுகளுக்கு இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.  

இதனால் இந்த தேர்தலில் பெரிய அளவில் நடிகர்கள் ,நடிகைகளை ஈடுபடுத்தினால் இன்னும் செலவு அதிகம் ஆகும் என்பதால் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இந்த முறை மிக குறைந்த அளவே நடிகர், நடிகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அதிகமாக எதிர்பார்த்த சினிமா நட்சத்திரங்கள் வராத காரணத்தால் கொஞ்சம் களையிழந்து காணப்படுகிறது.  

தலைப்புச்செய்திகள்